Tuesday 6 February 2018

ஆளுமை பயிற்சி முகாம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஆளுமை பயிற்சி முகாம் நடைபெற்றது.


                               முகாமிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.திரைப்பட இயக்குனரும்,நடிகருமான கணேஷ் பாபு மாணவர்களுக்கு ஆளுமையை வளர்த்து கொள்வது தொடர்பாகவும்,வாழ்க்கையில் வெற்றி பெறுவது,குறிக்கோள் நிர்ணயித்து கொள்வது தொடர்பாகவும் நாடகம் வழியாக  நடித்து காண்பித்து  பயிற்சி அளித்தார்.மாணவர்கள் ரஞ்சித்,கோட்டையன் ,நந்தகுமார்,உமாமகேஸ்வரி,காயத்ரி,நித்யகல்யாணி,காவியா,சக்தி உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டார்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திரைப்பட நடிகரும்,இயக்குனருமான கணேஷ் பாபு மாணவர்களுக்கு நாடகத்தின் வழியாக ஆளுமை பயிற்சி அளித்தார் . 

No comments:

Post a Comment