Wednesday 3 January 2018

மத்திய அரசின் போட்டிக்கு தகுதி தேர்வு 



                              
                            தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை  தேசிய  போட்டிக்கு   பள்ளி அளவில்  தகுதி போட்டி நடைபெற்றது.
                                 போட்டிக்கான நிகழ்ச்சியில்  மாணவர் ராஜேஷ்   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .ஆசிரியை செல்வமீனாள்   போட்டிகளை நடத்தினார். மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் வாருங்கள் ஒன்றிணைந்து மின்சாரம் தயாரிக்கலாம்  என்ற தலைப்பில் 4,5,6  வகுப்பு மாணவர்களுக்கிடையேயான பிரிவில் கிஷோர்குமார் முதல் பரிசையும், ஐயப்பன் இரண்டாம் பரிசையும் ,போலரை பாதுகாக்க சோலாரை பயன்படுத்துங்கள் என்ற தலைப்பில் 7,8 பிரிவு மாணவர்களுக்கிடையேயான நீர் வண்ண பூச்சு ஓவிய போட்டியில் காயத்ரி முதல் பரிசையும்,ஹரிஹரன் இரண்டாம் பரிசையும் பெற்றனர். நிறைவாக மாணவர் சபரி  நன்றி கூறினார்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள மாநில ஓவிய போட்டிக்கு தகுதி போட்டி பள்ளி அளவில் நடத்தபட்டது.



No comments:

Post a Comment