Wednesday 13 September 2017

அங்கன்வாடி ,சத்துணவு பணியாளர்கள் பங்களிப்பு சூப்பர் 

                     தோழர்களே ,ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆரம்பம் முதல் என்னை ஆச்சரியத்தில் வைத்துள்ள பார்வை அங்கன்வாடி,சத்துணவு பணியாளர்களின் பங்களிப்பு தான் பாராட்டுக்குரியது.குறைவான ஊதியம் பெற்றாலும் அவர்களின் பங்களிப்பு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.போராட்டக்களத்துக்கு வருதல் ,அங்கு ஆர்வமுடன் பங்கேற்றல் , அனைவர் முன்னிலையிலும் பேசுதல்,பேசுவதுடன் அனைவரின் கை தட்டுக்களை பெறுதல்,பொருளுடன் பேசுதல்,ஒரே யூனிபார்மாக சேலை அணிந்து வருதல் அனைத்தும் பாராட்டுக்குரியது.ஆசிரியர்கள் பலர் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.ஒரே இனமாக அவர்கள் கலந்துகொள்வது எனக்குள் பெறும் உந்துசக்தியை ஏற்படுத்தி உள்ளது.நமது செயல்பாடு மற்றவர்களை ஊக்குவிப்பதாக இருத்தல் வேண்டும்.அதனை அருமையாக அவர்கள் செய்கின்றனர்.பல ஆசிரியர்களை போராட்டத்துக்கு அழைத்தாலும் வருவதில்லை.மேடையில் பேச சொன்னாலும் பேசுவதும் இல்லை.போராட்டத்தில் இவர்களின் பேச்சை கேட்டு  பல ஆசிரியர்கள் சத்துணவு,அங்கன்வாடி ஊழியர்களின் தீவிர ரசிகர்களாக மாரி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இந்த போராட்டத்தில் நான் அவர்களிடம் இருந்து கற்று கொண்டது ஏராளம்.வாழ்க அவர்களது உணர்வுபூர்வமான இயக்க உணர்வு.வாழ்த்துக்களுடன் 
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்.





No comments:

Post a Comment