Saturday 16 September 2017

திருமறைக்காடு  ஒப்புவித்த மாணவர்களுக்கு பாராட்டு



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருமறைக்காடு,திருப்பிரமபுரம்,திருவிருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
                                       விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் . தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற திருப்பிரமபுரம்,திருவிருக்குறள் ஆகியவற்றை படித்து ஒப்புவிக்கும் போட்டியில் பங்கு பெற்ற திவ்யஸ்ரீ,ஆகாஷ்,சந்தோஷ்குமார்,ஈஸ்வரன்,அம்முஸ்ரீ ,தேவதர்ஷினி,புகழேந்தி,வெங்கட்ராமன், உட்பட 15 மாணவர்களுக்கும்  , திருமறைக்காடு ஒப்புவித்தல் போட்டியில் பங்குபெற்ற உமா மகேஸ்வரி ,ஜெனிபர் ,காவியா,ராஜேஷ்,நந்தகுமார் உட்பட 15மாணவர்களுக்கும்,  பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் ,போட்டிகளை நடத்திய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ,முத்தமிழ் வேத திருசபையின் துணை செயலருமான ஆதி ரெத்தினதிற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.
                     
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருமறைக்காடு,திருப்பிரமபுரம்,திருவிருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment