Saturday 15 July 2017



விடா முயற்சி ,கடின உழைப்பு  உடையவர் காமராசர் 
கல்வி வளர்ச்சி நாள் விழாவில்
 
நகராட்சி ஆணையாளர்  பேச்சு 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.



    விழாவில் ஆசிரியர் ஸ்ரீதர்  வரவேற்றார். விழாவின் தொடக்கமாக அபிராமி அந்தாதி,திருக்குறள் நடனம் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை நகராட்சி  ஆணையாளர் பார்த்தசாரதி  விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில், காமராஜர் எத்தனையோ தலைமுறை தாண்டியும் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு உள்ளார்.கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் .சாதாரண குடும்பத்தில் இருந்து முதலமைச்சர் ஆனவர்.உழைப்பு,விடாமுயற்சி உடையவர் .அவர் ஏற்படுத்தி கொடுத்த கல்வி கூடங்கள்   அனைவருக்கும் உபயோகமாக உள்ளது.விட்டு கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.இவ்வாறு பேசினார்.காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் முத்தையன்,திவ்யஸ்ரீ,வெங்கட்ராமன்,கிஷோர்குமார்,கீர்த்திகா ,
உமா மகேஸ்வரி ,ஜெனிபர் ஆகியோருக்கு தேவகோட்டை நகராட்சி  ஆணையாளர் பார்த்தசாரதி  பரிசுகளை வழங்கினார்.விழா நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
                                 காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைச் சிறப்பிக்கும் வகையிலும் அந்தத் திட்டம் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் சத்துணவாக பல வகை சாதங்களைச் சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.சுவையான சாத வகைகளோடு காமராஜர் விழா கொண்டாடப்பட்டது.

                    

 பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி  தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.

No comments:

Post a Comment