Sunday 26 February 2017

வார வழிபாட்டில்  சாதனை செய்த மாணவர்கள் 

முதல் பரிசினை நான்கு பேர் பெற்று சாதனை

                            தேவகோட்டை-   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசினை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




                              விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.    தேவகோட்டை நகர சிவன் கோவிலில் தொடர்ந்து பல வருடங்களாக வாரம் தோறும் வெள்ளிக்  கிழமையில் வாரவழிபாட்டுக் கூட்டம் ஜமீன்தார் சோம .நாராயணன் செட்டியார் தலைமையில் நடைபெற்று வருகிறது.இதில் பஞ்சபுராணத்தில் உள்ள தேவாரம்,திருவாசகம்,திருவிசைபா,திருபல்லாங்கு,பெரியபுராணம் மற்றும் அபிராமி அந்தாதி,திருப்புகழ் ஆகியவை தொடர்ந்து 43 வாரங்கள் நடைபெற்றன.இதனில்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  சுமார்  27 பேர் கலந்து கொண்டனர்.வாரம் தோறும் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வருடம்தோறும் சிவராத்திரி அன்று பரிசுகள் வழங்கி உற்சாகபடுத்தி வருகின்றனர்.இந்த வருடம் 18 மாணவர்கள் தொடர்ந்து அதிகமான வாரங்கள் சென்றதற்காக பரிசுகள் பெற்றனர்.முதல் பரிசினை  இப்பள்ளி மாணவர்கள் முத்தழகி , ஜெயஸ்ரீ, ஜனஸ்ரீ ,வெங்கட்ராமன் ஆகிய நான்கு பேரும் தொடர்ந்து இந்த வருடம் முழுவதும் அனைத்து வாரங்களும் கலந்து கொண்டதற்காக பரிசுகளை வென்றனர்.இப்பள்ளி மாணவர்கள் ராஜேஷ்,முகேஷ்கண்ணா,சண்முகம்,தனுதர்ஷினி,புகழேந்தி,
ரிஷிசெல்வா,தனலெட்சுமி,ராஜேஸ்வரி,காவியா,ஓவியா,ரஞ்சித்,
கார்த்திகேயன் ,சஞ்சய்,பெரியகருப்பன்   ஆகியோரும்  பரிசுகளை  பெற்றனர். பரிசுகள் பெற்ற மாணவிகளுக்கும்,கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், பள்ளியின்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரய ,ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.வாரம் தோறும் மாணவர்களுடன் கலந்துகொண்ட  முத்து மீனாள்ஆசிரியைக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து வார வழிபாட்டினை 67 ஆண்டுகளாக நடத்தி வரும் ஜமீன்தார் சோம .நாராயணன் செட்டியார் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து அதிக மாணவ,மாணவியர் வார வழிபாட்டு கூட்டதில் கலந்து கொண்டு பரிசுகள் பெற முயற்சி எடுக்க வேண்டும் என்று விழாவில் மாணவரிகளிடம் கேட்டுகொள்ளப்பட்டது. நிறைவாக ஆசிரியை  வாசுகி நன்றி கூறினார்.


பட விளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்க்கு தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment