Friday 2 December 2016

  தி இந்து ஆங்கில நாளிதழின் ஓவிய போட்டியில் பங்கேற்று தேர்வான  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 

 


     தி  இந்து ஆங்கில நாளிதழின் சார்பாக ஆன்லைன் வழியாக ஓவிய போட்டிக்கு பதிவு செய்து அதன் வழியாக பதிவு எண் பெற்று  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் சார்பாக முயற்சிகள் எடுத்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் காயத்ரி,கிருத்திகா ,கிஷோர்குமார் ஆகிய மூவருக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.போட்டியில் தேர்வானதற்கான சான்றிதழ் ஆன்லைன் வழியாக அனுப்பப்பட்டதை தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் திரு.எஸ் .பார்த்தசாரதி மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினார்.

No comments:

Post a Comment