தமிழ் இலக்கிய பேரவை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு
தேவகோட்டை- தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தமிழ் இலக்கிய பேரவை நடத்திய பேச்சு போட்டியில் வெற்றி பெற்றதற்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது.விழாவிற்கு வந்தவர்களை மாணவர் செந்தில் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை நடத்திய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நடத்திய பேச்சு போட்டியில் பங்கேற்று சான்றிதழ் மற்றும் பரிசு வென்று வந்த மாணவி தனலெட்சுமிக்கும்,போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்று வந்த மாணவர்கள் உமா மஹேஸ்வரி,ராஜேஸ்வரி,கார்த்திகேயன்,ரஞ்சித்,பார்கவி லலிதா ,ராஜேஷ்,பரமேஸ்வரி ஆகியோர் பாராட்டு பெற்றனர்.பள்ளி விடுமுறை நாளன்று போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர் ஸ்ரீதர்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக மாணவி ராஜி நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தமிழ் இலக்கிய பேரவை நடத்திய பேச்சு போட்டியில் பங்கு பெற்று சான்றிதழ் பெற்றதற்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது.
No comments:
Post a Comment