Wednesday 9 November 2016

மத்திய நிலத்தடி நீர் வாரியம் போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு 
                              
                 தேவகோட்டை -    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் நீர் வாரியத்தால் நடத்தப்படவுள்ள போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.



                                  மத்திய நீர் வாரியம் சார்பில் நீரை சேமிப்போம்,வருங்காலம் காப்போம் என்ற தலைப்பில் நீர் வண்ண பூச்சு ஓவிய போட்டிகள் நடைபெற்றது.6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட 60 க்கும் மேற்பட்ட மாணவர்களில்  மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.போட்டிக்கான நிகழ்ச்சியில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில் மூவரை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.
               8ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி  முதல் பரிசும்,அதே  வகுப்பை சார்ந்த மாணவி பிரவீனா   இரண்டாம் பரிசும்,6ம் வகுப்பு மாணவி காயத்ரி  மூன்றாம் பரிசும் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய நீர் வாரியத்தால் நடத்தப்படவுள்ள மாநில ஓவிய போட்டிக்கு தகுதி போட்டி பள்ளி அளவில் நடத்த பட்டது.

No comments:

Post a Comment