Sunday 18 September 2016

ஓவியம்,ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

 தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு  முதலிடம்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



                                  நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் ராஜேஷ் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு காலை இலக்கிய பெருமன்றம் தேவகோட்டை கிளையின் சார்பாக நடைபெற்ற ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று  முதல் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவி ராஜேஸ்வரிக்கும்,சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஓவிய போட்டியில் முதல் இடம்   வென்று   சான்றிதழ் மற்றும் பரிசு பெட்ரா மாணவர் கிஷோர்குமாருக்கும், மூன்றாம் இடம் பெற்ற யோகேஷ்க்கும்,சிறப்பு பரிசுகள் பெற்ற மாணவர்கள் முத்தய்யன் ,ஜெயஸ்ரீ,அம்முஸ்ரீ,தனுதர்ஷினி,கார்த்திகேயன்,ஜெனிபர் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பாக நடைபெற்ற பாரதி விழா போட்டியிலும் இப்பள்ளி மாணவி ராஜேஸ்வரி முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.போட்டிகளில் பங்கு பெற பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும்,போட்டிகளுக்கும்,பரிசளிப்பு விழாவிற்கும் விடுமுறை நாளன்று அழைத்து சென்ற ஆசிரிர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு ஓவியம்,ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பரிசு  பெற்ற  மாணவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment