Tuesday 20 September 2016

சுட்டி விகடனின் சுட்டி மெயில் பகுதியில் கடிதம் எழுதி புத்தகம்  பரிசு பெற்றுள்ள  தேவகோட்டை சேர்மன் மாணிக்க  உதவி பெறும் நடுநிலைப் மாணவி சின்னம்மாளுக்கு பள்ளியில் பாராட்டு

சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவர்கள் 

இந்த மாத சுட்டி விகடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களால் வாங்கி கொடுக்கப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் அதனை படிக்கும் காட்சி.

                                       கியூட் பெங்குவின் 

சுட்டி விகடனின் கியூட் பெங்குவின்
சுட்டி கிரியேசன்ஸ் கியூட் பெங்குவின்  வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சுட்டி விகடன் 30/09/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான கியூட் பெங்குவின்  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .


Monday 19 September 2016

புதிய தலைமுறை ஆசிரியர் திரு.மாலன் அவர்களுடன் தேவகோட்டையில் நேற்று எடுத்த படம்
சுட்டி விகடனில் வெளியாகி உள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவர்களின் FA செயல்பாடுகள்

தேவகோட்டை பாரதி விழாவில் வெற்றி பெற்று பரிசு பெறும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர் 


சுட்டி விகடனில் வெளியாகும் போட்டியில் ஆசிரியரின் உதவியுடன் போட்டியில் பங்கேற்று ரூபாய் 250 பரிசு பெற்றுள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவி பிரவீனா 

Sunday 18 September 2016

ஓவியம்,ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

 தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு  முதலிடம்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 17 September 2016

                                 கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Friday 16 September 2016

இனிய நந்தவனம் புத்தகத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி



இனிய நந்தவனம் என்கிற புத்தகத்தில் தமிழ்நாடு முழுவதும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் தகவல்களும்,தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் படமும் வெளிவந்துள்ளதை காணுங்கள்.பேட்டி எடுத்த நண்பருக்கும்,இனிய நந்தவனம் இதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Thursday 15 September 2016

 நண்பர்களே ,ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுலா 


                                                      ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 5.45 மணிக்கு ராமநாதபுரதிலிருந்து கிளம்பி ராமேஸ்வரம் சென்றோம்.
                                            ராமேஸ்வரம் கோவில் தரிசனம் ,டி .வி.டவர்
                  அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு இருக்கும் டி .வி.டவர் பகுதிக்கு சென்று பார்த்தோம்.
                                                      ராமர் பாதம்
                    அடுத்து ராமர் பாதம் கோவிலுக்கு சென்று கண்டு களித்தோம்.
                                       காலை உணவு
 ராமேஸ்வரத்தில் அட்சயா ஹோட்டலில் சாப்பிட்டோம்.அருமையான டிபன்.
                    அரிச்சல் முனை
அங்கிருந்து தனுசுகோடி சென்றோம்.அங்கு அரிச்சல் முனை பகுதிக்கும் சென்றோம்.அங்கு அருமையான கடல் இணையும் இடத்தை பார்த்தோம்.ஒரு பக்கம் அமைதியான கடல் பகுதி,இன்னொரு பக்கம் ஆர்ப்பரிக்கும் கடல்.இரண்டும் ஒன்றாக இணையும் இடம் .அருமையான இடம்.ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த இடத்தில் இருந்து ரசித்தோம்.
                               தனுசுகோடி பகுதி
            மீண்டும் அங்கிருந்து தனுசுகோடி சர்ச்,போஸ்ட் ஆபீஸ்,ரயில் இருந்த இடம் என அனைத்தயும் பார்த்தோம்.
                         கோதண்டராமர் கோவில்
அங்கிருந்து கோதண்டராமர் கோவிலுக்கு சென்றோம்.கடலுக்கு நடுவே அருமையான கோவில்.
                          மிதக்கும் கல்
அங்கிருந்து மிதக்கும் கல் இருக்கும் இடத்திற்கு சென்றோம்.
                     அப்துல் கலாம் நினைவிடம்
அடுத்ததாக அப்துல் கலாம் நினைவிடம் சென்றோம்.
                                               பாம்பன் பாலம்
அடுத்து பாம்பன் பலம் இடத்தை ரசித்து பார்த்தோம்.நல்ல காற்று அடித்தது.
                          குந்து கால் மண்டபம் 
அங்கிருந்து குந்து  கால் சென்றோம்.அங்கு சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சுறாமீன் ( சுமார் 13 அடி ) கரை ஒதுங்கியுள்ளதாக அழைத்து சென்றனர்.கடல் நடுவே கரை ஓரத்தில் கால்களில் அலை அடிக்க நடந்தே சென்று அந்த சுறாமீனை பார்த்து வந்தோம்.குந்து கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தரின் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளே தியான மண்டபத்தில் நன்றாக தியானம் செய்தோம்.
                       காட்சி மற்றும் கருத்து அருங்காட்சியகம்
அங்கு அமைக்கப்பட்டுள்ள காட்சி மற்றும் கருத்து அமைப்பகத்தில் உள்ள மீன் வகைகளையும்,மெல்லுடலிகள் போன்ற பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தையும் பார்வையிட்டோம்.நல்ல தகவல் கிடைக்கப்பெற்றது.
                        சுந்தரமுடையான் பழத்தோட்டம்,பீச்சு 
அங்கிருந்து சுந்தரமுடையான் பழத்தோட்டம் ,சுந்தரமுடையான் பீச்சுக்கு சென்று ரசித்தோம்.
                                             அரியமான் பீச்சு மற்றும் போட்டிங்
மீண்டும் அரியமான் பீச்சுக்கும் சென்று ரசித்தோம்.அங்கு போட்டிங் சென்றோம்.நடுகடலில் போட்டிங் சென்றது அருமையான அனுபவம்.மேலும் அங்கு தண்ணீர் கண்ணாடி போல் மிக தெளிவாக உள்ளது.சுத்தமாக அலை அடிக்கவில்லை.அமைதியான நதி போல் உள்ளது.சந்தோசமாக ரசித்தோம்.
                                                    மதிய உணவு
மீண்டும் கிளம்பி ecr சாலையில் உள்ள ஐஸ்வர்யா ஹோட்டலில் சாப்பிட்டோம்.
                              தேவி பட்டினம் தரிசனம்
அங்கிருந்து தேவிபட்டினம் சென்றோம்.நல்ல தரிசனம்.
ஐந்திணை பூங்கா ( மரபணு பூங்கா)
அங்கிருந்து ஐந்திணை பூங்காவை பார்த்தோம்.( மரபணு பூங்கா ).
 திருப்புல்லாணி கோவில்
அங்கிருந்து திருப்புல்லாணி கோவிலுக்கு சென்றோம்.அங்கு ராமர் புல்லில் சயனம் கொண்டிருப்பதாக சொன்னார்கள்.அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு
     உத்திரகோசமங்கை - நடராசர்
உத்திரகோசமங்கை சென்றோம்.அருமையான பெரிய கோவில்.இலந்தை மரம் ஸ்தல விருட்சம்.மேலும் மாணிக்க வாசகர் உமாமஹேஸ்வரரை கும்பிடுவது போல் காட்சி உள்ளது.
                                உப்பளம் பணிகள் பார்வையிடல் 
அனைத்தையும் பார்த்து ரசித்து விட்டு ராமநாதபுரம் வரும் வழியில் உப்பளம் எடுக்கும் பணிகளை பார்வையிட்டோம்.ஒரு நாள் சுற்றுலா இனிதே நிறைவு பெற்றது.


தனுசுகோடி- சர்ச் 


தனுசுகோடி- பீச்சு 


தனுசுகோடி- போஸ்ட் ஆபீஸ் 


தனுசுகோடி- அந்த காலத்து ரயில் நிலையம் 


தனுசுகோடி- தற்போது உள்ள ஸ்கூல் 


கருத்து விளக்க மையம் மற்றும் அருங்காட்சியகம்



Monday 12 September 2016

பள்ளிக்கு தீடீர் விடுமுறை அறிவித்த  மாணவர்


பொய்யானது காட்டுத் தீ போல் , வேகமாக பரவும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். Good experience to all.
                             பள்ளியில்  பாரதியார் விழா

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா  நடைபெற்றது.


Sunday 11 September 2016

 இன்று விடுமுறை நாளன்று தேவகோட்டையில் இருந்து மாணவர்களை சிவகங்கைக்கு பாரதி விழா போட்டிகளுக்கு ஆசிரியர் ஸ்ரீதர் அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்று மாணவர்கள் சான்றிதழ் பெறுதல் 

சிவகங்கையில்  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய பாரதி விழாவில் வண்ணம் தீட்டுதல் ,பாரதியார் பாம் வரைதல் ,பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.உடன் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றதின் சிவகங்கை தலைவரும் , முன்னாள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான  கண்ணப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.ஆசிரியர் ஸ்ரீதர். 



Friday 9 September 2016

அட்டை படமாக அரசு உதவி பெறும் பள்ளி மாணவியின் படம்

துடிப்பு என்கிற மாத இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் 2ம் வகுப்பு மாணவியின் படம் அட்டை படமாகவும் ,அவரது சாதனைகள் மற்றும் அவரது பெற்றோரின் படங்கள்,மாணவியின் படங்கள் விரிவாக புத்தகத்தில் வெளியிடப்பட்டுளள்து.வாழ்த்துவோமாக.

Tuesday 6 September 2016

எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா 

   தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கியும்,ஆசிரியர் தின சிறப்புரை வழங்கியும் பேசியபோது எடுத்த படங்கள்.அருமையான வாய்ப்பை வழங்கிய கல்லூரி முதல்வர் திரு.ஜான் வசந்த் அவர்களுக்கும்,கல்லூரி நிருவாகத்துக்கும் நன்றிகள் பல.இந்நிகழ்வில் சுமார் 1300 மாணவர்கள் மற்றும் 65க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அலுவலர்கள் முன்பாக ஆசிரியர் தின உரை நிகழ்த்தியதை எண்ணி மகிழ்கின்றேன்.அன்புடன் லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

 

Sunday 4 September 2016

புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடை  போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ,மாணவ ,மாணவியர் பங்கேற்று தங்களின் அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்தினார்கள்.அவர்களை பாராட்டி புதிய தலைமுறை சான்றிதழ்களை வழங்கியுள்ளது. நாமும் பாராட்டுக்களை தெரிவிப்போம்.

Friday 2 September 2016

தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்
மனிதனில் மட்டுமே காணப்படக்கூடிய நோய் தொழுநோய்

தொழுநோய் மேற்பார்வையாளர் பேச்சு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.