Saturday 6 August 2016


தேவகோட்டை நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியில் வாகனம்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.



                                      நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அகஸ்தியா அறக்கட்டளை மற்றும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் இந்த அறிவியல் வாகனம் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனை மூலம் சென்னையை சார்ந்த பயிற்சியாளர் கவியரசு செய்து காண்பித்தார்.வளிமண்டல காற்று,காற்றின் அழுத்தம்,காற்றின் சமநிலை அறியும் சோதனை ஆகியனவற்றை சிறிய பிளாஸ்டிக் பந்து,சிறிய பிளாஸ்டிக் குழல் கொண்டு செய்து காண்பித்தார்.வெற்றிடம்  ஏற்படுகிறது? சூறாவளி சுழலும் காற்று எப்படி உருவாகிறது? என்பது பற்றியும் குறைந்த காற்றழுத்தம்,உயர்ந்த காற்றழுத்தம் ஆகியன கொண்டும் விளக்கினார்.
                               
                                   காற்றழுத்த குழாய் கொண்டு நீருக்குள் செங்கோண வடிவில் குழல் வைத்தும்,வெற்றிட குழாயுக்குள் வரும் காற்றை ஊதவைத்து ,குடுவையில் நீர் காற்றுழுத்ததால் தெறிக்க செய்து நீர் தெளிப்பான் சோதனை செய்து காண்பித்தார்.இது பம்பு செட்,பூச்சிக்கொல்லி மருந்தடிக்கும் கருவி ,சென்ட் குடுவை ஆகிவற்றில் இம்முறை பயன்படுத்தபடுகிறது  என  விளக்கினார்.  காற்றழுத்த கருவி மின் விசை கொண்டு பந்து உயரே சுழலும் சோதனை செய்து காண்பித்தார்.பருப்பொருள் ஒவ்வொன்றின் நிறை,பண்புகள்,பாயும் தன்மை,இயற்பியல் மாற்றம் ,வேதியியல் மாற்றம் ஆகியன செய்து காண்பித்தார்.
                                                  மாணவர்கள் ஜெகதீஸ்வரன்,விஜய்,பரத்,தனலெட்சுமி,ராஜேஸ்வரி,சின்னம்மாள் ,காவியா உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் வாயிலாக மாணவர்களுக்கு சோதனைகளை அமுமு அறக்கட்டளை   மற்றும் அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர் கவியரசு செய்து காண்பித்தார்.
                                  
                          

No comments:

Post a Comment