Friday 19 August 2016

விருது பெற்ற மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விருது பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டும் விழா நடைபெற்றது.


                                 நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவர் ஜெகதீஷ் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை த .மு.எ .ச.கலை இலக்கிய இரவு விழாவில் மாநில அளவில் பரிசுகளை வென்ற இப்பள்ளி மாணவிகள் தனலெட்சுமி,பரமேஸ்வரி,காவியா ஆகியோருக்கு விருதுகளும்,புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது.மாநில அளவில் போட்டிகளில்  வெற்றி பெறுவதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர் ஸ்ரீதர்,ஆசிரியை முத்துமீனாள் ஆகியோருக்கும்,விருது பெற்ற மாணவிகளுக்கும்  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவர்கள் ,பெற்றோர்கள் பாராட்டினார்கள்.நிறைவாக  மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவில் பரிசுகள் பெற்றதனை பாராட்டி தேவகோட்டை த .மு.எ .ச.கலை இலக்கிய இரவு விழாவில் விருது வழங்கப்பட்டதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment