Thursday 11 August 2016

சமூகத்திற்கு பயன்படக்கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள் 

மாவட்ட கல்வி அதிகாரி பேச்சு 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கவிதை சொல்லுதல் போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி மாணவர்களிடம் சமூகத்திற்கு பயன்படக்கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள்  என பேசினார்.



                                      கவிதை சொல்லுதல் போட்டிக்கு வந்தவர்களை மாணவர் ஜீவா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசும்போது , நமது வாழ்க்கை சமூகத்திற்கு பயன்படக்கூடிய வகையில் இலட்சியத்தோடு இலக்கை நோக்கி குறிக்கோள் கொண்டு செல்ல கூடியதாக இருக்க வேண்டும்.
                                                                  மணி அடிப்பதற்காக பள்ளிக்கு செல்லக் கூடாது.மணி அடிப்பது திட்டத்திற்கான நேர  செய்லபாடு.அவ்வாறு இயங்க கூடாது.நம்முடைய இயக்கமானது தடையில்லாத இயக்கமாக இருக்க வேண்டும்.திருவள்ளுவர் ,பாரதியார்,காந்தி போன்றோர் தங்களுக்கு என்று  முத்திரை பதித்தனர்.அது போல் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் முத்திரை பதிக்க இலக்கை வகுத்து கொள்ள வேண்டும்.கலாம் வாழ்க்கையின்  மூலமாக பல நல்ல தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.பாரதியார் காலையில் எழுந்து படிக்கலாம் என பாடியுளார்.அதற்கு காரணம் அதி காலையில் நமது மனது அறிவியல் ரீதியாக மிகவும் துரிதமாக செயல்படும்.அந்த நேரத்தில் நாம் படித்தால் நமது மனதில் அனைத்து விஷயங்களும் நன்றாக நிற்கும்.முதியோர் இல்லங்களுக்கு எந்த காலத்திலும் பெற்றோர்களை நன்கொடையாக கொடுக்காதீர்கள் ! எதை வேண்டுமானாலும் நன்கொடையாக கொடுங்கள்.ஆனால் பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாதீர்கள்.பெற்ற தாய் தந்தையரை பேணி காக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.
                            கவிதை சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் முத்தையன்,ஆகாஷ்குமார்,அம்மு ஸ்ரீ,ஜனஸ்ரீ ,கிருத்திகா,மாதரசி,ராஜேஷ்,பார்கவி லலிதா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார்.நிறைவாக மாணவர் விஜய்  நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கவிதை சொல்லுதல் போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி மாரிமுத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

No comments:

Post a Comment