Monday 18 July 2016

                                      பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சன்மார்க்க சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுதல் நிகழ்ச்சி   நடைபெற்றது.




                                                                     நிகழ்வில் மாணவர் விஜய் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை சன்மார்க்க சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும்,  பரிசுகளும்,சான்றிதழ்களும் பெற்ற மாணவிகள் காயத்ரி,உமா மஹேஸ்வரி,தனலெட்சுமி ஆகியோருக்கும்,அழைத்து சென்ற ஆசிரியை கலாவல்லிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாணவி சந்தியா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் சன்மார்க்க சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்றதற்கும்,பரிசுகள் பெற்றதற்கும் பாராட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:

Post a Comment