Wednesday 8 June 2016

 சேக்கிழார் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு 


      தேவகோட்டை -    தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வில் அனைத்து பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்ரி,கார்த்திகேயன்,ரஞ்சித்,தனலெட்சுமி,பார்கவி லலிதா,கண்ணதாசன்,யோகேஸ்வரன்,தனம்,ராஜலெட்சுமி,சௌமியா ஆகியோருக்கு   தமிழ் வள்ளல் மெய்யப்பர் நினைவு பரிசுகளையும் சான்றிதல்களையும் சிவநெறி செல்வர் பேரா.சொக்கலிங்கம்,பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் ஆகியோர் வழங்கினார்கள் .மாணவர்களுக்கு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர்க்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.உடன் சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம் ,பொருளாளர் தெட்சினாமூர்த்தி ,கவிஞர் பழனியப்பன் உள்ளனர். 



பட விளக்கம் : தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வில் அனைத்து பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பரிசுகளை சிவநெறி செல்வர் பேரா.சொக்கலிங்கம்,பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் ஆகியோர் வழங்கினார்கள் .உடன் சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம் ,பொருளாளர் தெட்சினாமூர்த்தி ,கவிஞர் பழனியப்பன் உள்ளனர்.

No comments:

Post a Comment