Sunday 12 June 2016

   சர்வதேச குழந்தை தொழிலாளார் முறை ஒழிப்பு தினம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தை தொழிலாளார் முறை ஒழிப்பு தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



                                       விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி ராஜி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .அனைத்து குழந்தைகளும் 15வயது வரை கல்விதான் கற்க வேண்டும்.கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்.குழந்தைகளை பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கும் விதமாக நாடகம் நடித்து காண்பிக்கப்பட்டதுடன் பாடல்களும் பாடப்பட்டன.வறுமையை ஒழித்து குழந்தை தொழிலாளார் இல்லாத வகையில் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்று ஆசிரிய,ஆசிரியைகள் மானவ்,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .மாணவர் ஜீவா நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச குழந்தை தொழிலாளார் முறை ஒழிப்பு தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவ,மாணவியர் ,ஆசிரியர்,ஆசிரியைகள்  உறுதிமொழி கூறினார்கள்.

No comments:

Post a Comment