Monday 25 January 2016

தேசிய வாக்காளர் தின விழா 

தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுடன் சப் கலெக்டர் கலந்துரையாடல் 
                     சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில்  நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாகொண்டாட்டத்தில் 100 சதவிகிதம் வாக்களிக்க ஆவண செய்வதே  தேசிய வாக்காளர் தினத்தின் நோக்கம் என தேவகோட்டை சப் கலெக்டர் பேசினார்.


                          சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் கலந்துகொண்டோரை பள்ளியின் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை சப் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி மேலாளர் பிச்சை மைதீன் , வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சப் கலெக்டர்  மாணவ,மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில்,அனைவரும் வாக்களிக்க ஆவண செய்வதே அரசின் நோக்கமாகும்.100 சதவிகிதம் வாக்களிக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.அதற்காகத்தான் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கபடுகிறது.எனது பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி நான் உங்களை போன்று 4ம் வகுப்பு படிக்கையில் எனக்கு போட்டியில் வெற்றி பெற்றதற்காக உதவி கலெக்டர் கையால் பரிசு வாங்கினேன்.அது எனது பள்ளி வாழ்கையில் மறக்க இயலாத சம்பவம்.IAS ஆவதற்கு இளம் வயதில் குறிக்கோள் வைத்து கொள்ள வேண்டும்.நான் IAS ஆவதற்கு எனது தம்பியும்,எனது அம்மாவும் மிகுந்த உதவி செய்தனர்.பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது எனது வகுப்பு ஆசிரியை போட்டிகளில் வெற்றி பெற்ற உடன் பாராட்டு தெரிவிப்பார். அவர்  எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்.இந்த பணியின் மூலம் மக்களுக்கு பணி செய்வதே எனது லட்சியம் ஆகும் , இவ்வாறு அவர் பேசினார். விழாவில்   மூத்த குடிமகன் லெட்சுமணன் என்பவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
                                                                        அரசு உத்தரவின்படி வாக்களிப்பது எனது உரிமை,எனது கடமை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியமான பங்கு வாக்காளர்களே என்கிற தலைப்புகளில் ரங்கோலி போட்டி,கட்டுரை போட்டி,ஓவிய போட்டி,பேச்சு போட்டிகள் நடைபெற்றன்.பள்ளி ஆசிரியைகள் முத்து மீனாள் ,வாசுகி ,நகராட்சி அலுவலர் சண்முகவேல் ஆகியோர் ரங்கோலி போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளில் முதல்,இரண்டாம்,மூன்றாம்  பரிசுக்குரியவர்களை தேர்ந்து எடுத்தனர். ரங்கோலி போட்டியில் முதல் பரிசை சௌமியாயும் ,இரண்டாம் பரிசை தனமும்,மூன்றாம் பரிசை முனீஸ்வரனும் பெற்றனர்.வாக்காளர் தினம் தொடர்பாக 1ம் வகுப்பு திவ்ய ஸ்ரீ,இரண்டாம் வகுப்பு அம்மு ஸ்ரீ,உள்ளாட்சி அமைப்பு தொடர்பாக 4ம் வகுப்பு ஐயப்பன்,நகர்ப்புற அமைப்பு தொடர்பாக 5ம் வகுப்பு கார்த்திகேயன்,மக்கள் கடமை என்கிற தலைப்பில் 6ம் வகுப்பு ரஞ்சித் ,குடியாட்சி பெருமை என்கிற தலைப்பில் 7ம் வகுப்பு தனலெட்சுமி,மாணவரும் ,சமூக தொண்டும் என்கிற தலைப்பில் 8ம் வகுப்பு ஆகாஷ் குமாரும் பேசினார்கள்.வாக்களிப்பது நமது கடமை என்கிற தலைப்பில் பரமேஸ்வரி,ஜெனிபர்,நித்ய கல்யாணி,ஜீவா,ராஜேஷ்,ராஜேஸ்வரி ஆகியோர் நாடகம் நடத்தி காண்பித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
                                     தேவகோட்டை சப் கலெக்டர்  தேர்தல் வாக்களர் உறுதிமொழி கூற  அனைத்து மாணவ-மாணவியரும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .விழாவில் திரளான பெற்றோரும் கலந்துகொண்டனர்.நிறைவாக தேவகோட்டை நகராட்சி தேர்தல்  பிரிவு எழுத்தர் ராமகிருசணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து லெட்சுமி  செய்திருந்தார்.


பட விளக்கம்;IMG:0284 தேவக்கோட்டை சேர்மன்  மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளயில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரங்கோலி போட்டியில் பரிசுக்குரியவர்களை தேவகோட்டை சப் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் , நகராட்சி மேலாளர் பிச்சை மைதீன் ஆகியோர் ரங்கோலி கோலங்களை பார்வையிட்டனர். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.

 
பட விளக்கம்;IMG:0299 தேவக்கோட்டை சேர்மன்  மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளயில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சப் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் மூத்த குடிமகன் லெட்சுமணன் என்பார்க்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.உடன்  நகராட்சி மேலாளர் பிச்சை மைதீன் , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,நகராட்சி தேர்தல் பிரிவு எழுத்தர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment