Thursday 24 December 2015

          ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


                            தேவகோட்டை சௌபாக்கிய துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமுருகாற்றுப்படை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா  நடைபெற்றது.விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை வாசுகி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .பரிசு பெற்ற மாணவர்களான ஜெயஸ்ரீ,திவ்யஸ்ரீ ,வெங்கட்ராமன், கீர்த்தியா ,ஜனஸ்ரீ ,உமா மகேஸ்வரி,தனலெட்சுமி,ஆகாஷ்குமார் ஆகியோருக்கும், பயற்சி அளித்த ஆசிரியை முத்துலெட்சுமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.பள்ளி விடுமுறை நாளன்றும் மாணவ,மாணவியர்க்கு பயற்சி அளித்து ஆசிரியை போட்டிகளுக்கு அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் ; ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று பரிசு பொருள்களுடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்



No comments:

Post a Comment