Sunday 15 November 2015

 ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் (அரசு உதவி பெறும் பள்ளி ) 1ம் வகுப்பு மாணவியின் பேச்சை காண 16/11/2015 அன்று ( மாலை சரியாக 5.35 மணிக்கு ) வாருங்கள்.முழு நிகழ்ச்சியையும் ( 1 மணி நேரம்) 5ம் வகுப்பு மாணவி காயத்ரி தொகுத்து வழங்க உள்ளார்.மகிழ்ச்சியாக இருக்க பாடல்கள்,கருத்து மிக்க பொம்மலாட்ட நாடகம்,ஆங்கில நாடகங்கள் என அனைத்தையும் காண வாருங்கள்.



தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின்  ( அரசு உதவிபெறும்  பள்ளி ) சார்பாக கலை நிகழ்ச்சிகள் 16/11/2015



             தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் 16/11/2015 அன்று  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகளை மாலை சரியாக 5.35 மணிக்கு கண்டு மகிழ  அனைவரும் வாருங்கள்.இதில் கீழ்க்கண்ட வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 1 முதல் 8 வரை உள்ள மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது.இப்பள்ளி நிகழ்ச்சிகளுக்கு பிறகு சொல்லின் செல்வர் திரு.சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவும்,திருமதி.நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கீழ் கண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குபவர் 5ம் வகுப்பு காயத்ரி என்ற மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

1.விநாயகர் துதி- குழு நடனம் 

2. கந்த சஷ்டி விழாவின் சிறப்புகள் - ஆங்கில,தமிழ்  உரை ( மூன்றாம் வகுப்பு,6ம் வகுப்பு மாணவர்கள்)


3.பாடல்-குழு நடனம் 

4.ஆங்கில நாடகம் 

5.பாடல்- தனி நடனம் 

6.1ம்வகுப்பு,2ம் வகுப்பு,3ம் வகுப்பு மாணவ,மாணவியரின் சொற்பொழிவு 

7.பாடல்- குழு நடனம் ( 1ம் வகுப்பு,2ம் வகுப்பு,3ம் வகுப்பு)

8.ஆங்கில நாடகம் 

9. கும்மி பாடல் நடனம்

10.பொம்மலாட்டம் 

11. பாடல்- நடனம் 

இவை அனைத்தையும் கண்டு மகிழ ,மாணவ,மாணவியரை வாழ்த்துவதற்கும் அன்புடன் அழைக்கின்றோம்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்

No comments:

Post a Comment