Friday 21 August 2015

 மாணவர்கள் அறிவியல் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் 
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பேச்சு 

 அணு யுத்தத்தால் அகதிகளாய் குழந்தைகள் ஓவிய போட்டி 




தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அறிவியல் விழிப்புணர்வு மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.
                                 நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார்.ஏழாம் வகுப்பு மாணவி தனலெட்சுமி மற்றும் 3ம் வகுப்பு மாணவி காயத்ரி ஆகியோர் அறிவோம் அறிவியல் பற்றி பேசினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலர்  ஜீவானந்தம் ஹிரோஷிமா,நாகசாகி தினத்தை முன்னிட்டு அணு யுத்தத்தால் அகதிகளாய் குழந்தைகள் என்கிற தலைப்பில் நடைபெற்ற  ஓவிய போட்டியை துவக்கி வைத்து  சிறப்புரையாற்றி பேசுகையில் , ஹிரோஷிமா,நாகசாகி அணுகுண்டு பாதிப்பு குறித்தும்,தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்தும்,சமாதன புறா தொடர்பாகவும் ,மாணவர்களிடையே அதிகமான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக பேசினார்.பள்ளி அளவிலான இப்போட்டியில் 8ம் வகுப்பு மாணவி தனம் முதல் பரிசையும்,7ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி  இரண்டாம் பரிசையும் ,7ம் வகுப்பு மாணவி சுமித்ரா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.




 பட விளக்கம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை  மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.ஓவிய போட்டியை துவக்கி வைத்தார்.

No comments:

Post a Comment