Saturday 15 August 2015

 சுதந்திர தின விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடமிருந்து  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு பாராட்டு மற்றும் பரிசு 




                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியதை மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவ,மாணவியர் ,ஆசிரியர்,ஆசிரியைகள் தேவகோட்டையில் இருந்து சிவகங்கை சென்றனர்.மாவட்ட அளவில் அரசு மற்றும்  அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கலந்து கொண்ட ஒரே பள்ளி இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


பட விளக்கம்: IMJ-  2691,2694  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.


பட விளக்கம் :  IMJ-2698     சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியதை மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.         

No comments:

Post a Comment