தேவக்கோட்டை- தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை ,நடுநிலைப் பள்ளிகளில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 24 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது.தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 6695 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவர்கள் நடராஜன் ,நவீன்குமார்,கிருஷ்ணவேணி ,சொர்ணாம்பிகா ஆகிய நான்கு பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காலை வழிபாட்டு கூட்டத்தில் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மாணவர்கள் அவர் தம் பெற்றோரும் பள்ளிக்கு வருகை தந்து காலை வழிபாட்டு கூட்டத்தில் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.இது குறித்து வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில் ,நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.எங்களின் வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்,ஈரோடு ரயில்வே பள்ளி ஆசிரியர் துரை பாண்டியன்,பெறோர்கள் விடா முயற்சியே காரணம்,அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,என மாணவர்கள் தெரிவித்தனர். 10ம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்ததேர்வு முடிவுகள் முக்கியமானது.
பட விளக்கம் : தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவ ,மாணவியர் மாநில அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி பெற்றனர் . மாணவர்களுக்கு காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.உடன் வெற்றி பெற்ற மாணவ,மாணவியரின் பெற்றோர் உள்ளனர்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை ,நடுநிலைப் பள்ளிகளில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 24 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது.தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 6695 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவர்கள் நடராஜன் ,நவீன்குமார்,கிருஷ்ணவேணி ,சொர்ணாம்பிகா ஆகிய நான்கு பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காலை வழிபாட்டு கூட்டத்தில் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மாணவர்கள் அவர் தம் பெற்றோரும் பள்ளிக்கு வருகை தந்து காலை வழிபாட்டு கூட்டத்தில் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.இது குறித்து வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில் ,நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.எங்களின் வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்,ஈரோடு ரயில்வே பள்ளி ஆசிரியர் துரை பாண்டியன்,பெறோர்கள் விடா முயற்சியே காரணம்,அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,என மாணவர்கள் தெரிவித்தனர். 10ம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்ததேர்வு முடிவுகள் முக்கியமானது.
பட விளக்கம் : தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவ ,மாணவியர் மாநில அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி பெற்றனர் . மாணவர்களுக்கு காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.உடன் வெற்றி பெற்ற மாணவ,மாணவியரின் பெற்றோர் உள்ளனர்.
No comments:
Post a Comment