Wednesday 11 February 2015

பப்பாளி இலைச் சாறு ,நிலவேம்பு குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகும்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அரசு சித்த மருத்துவர் பேச்சு 






                   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களிடம் கலந்துரையாடல்  மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது.
                                         நிகழ்ச்சியில்  பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் வரவேற்புரை வழங்கினார்.ரோட்டரி சங்க தலைவர் பேராசிரியர் முருகன் தலைமை தாங்கினார்.சிவகங்கை மாவட்ட தேவகோட்டை சரக உதவி கலெக்டர்  சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி  மாணவர்களுக்கு  நிலவேம்பு குடிநீர் வழங்குதலை தொடங்கி வைத்தார். டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு சித்த மருத்துவர் பாரி  பேசுகையில் , பப்பாளி இலைச் சாறு ,மலை வேம்பு குடிநீர்  ,நிலவேம்பு குடிநீர்  ஆகிவற்றை குடித்தால் ரத்த தட்ட அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதனால் டெங்கு காய்ச்சல் படி,படியாக குறையும்.டெங்கு காய்ச்சல் கொசுவினால் ஏற்படுகிறது.கொசு வராமல் சுத்தமாக நமது இடத்தை வைத்து கொண்டால்பெரும்பாலான நோய்கள்  நம்மை நெருங்காது.நிலவேம்பு குடிநீரில் 9 வகையான மூலிகை பொருள்கள் உள்ளன.டெங்கு என்ற பெயர் 1776 ம் ஆண்டில் இருந்து அறியப்படுகிறது.மழை காலங்களில்தான் அதிகமாக இதன் தாக்கம் இருக்கிறது.ஒரு கொசு சுமார் பனிரெண்டாயிரம் முட்டைகளை இடும்.எனவே ஒரு கொசுவை அழித்தால் 12,000 கொசுக்களின் உற்பத்தியை நாம் தடை செய்கிறோம்.எனவே கொசுவை ஒழித்து,அதனை வளரவிடாமால் நாம் தடை செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.அதற்கு நமது சுற்றுபுரத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.பரமேஸ்வரி,மங்கையர்கரசி ,சொர்ணம்பிகா,கிருஷ்ணவேணி,நவீன் குமார் ,காயத்ரி,சமயபுரத்தாள்,தனம் போன்ற மாணவ,மாணவிகள் மருத்துவரிடம் டெங்கு தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.இந்நிகழ்ச்சியின் ரோட்டரி திட்ட இயக்குனர்   ஆணிமுத்து ,கணேசன் ,போஸ் ,மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் எராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு பதில் பெற்றதுடன் ,நிலவேம்பு குடிநீர் அருந்தி சென்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கதினர் செய்திருந்தனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களிடம்  நடைபெற்ற கலந்துரையாடல்  நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சிதம்பரம் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.உடன் ரோட்டரி சங்க  தலைவர் முருகன்,அரசு சித்த மருத்துவர் பாரி,பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளனர்.

 பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களிடம்  நடைபெற்ற கலந்துரையாடல்  நிகழ்ச்சியில் அரசு சித்த மருத்துவர் பாரி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.உடன் உதவி கலெக்டர் சிதம்பரம், ரோட்டரி சங்க  தலைவர் முருகன்,பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளனர்.


 பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களிடம்  நடைபெற்ற கலந்துரையாடல்  நிகழ்ச்சியில்  உதவி கலெக்டர் சிதம்பரம் பேசினார்.உடன் அரசு சித்த மருத்துவர் பாரி,ரோட்டரி சங்க  தலைவர் முருகன்,பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளனர்.

No comments:

Post a Comment