கடந்த வாரத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் சிவகங்கை மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு நடத்திய பேச்சு போட்டியில் (பொது தலைப்பு :மாணவ சமுதாயத்திற்க்கு மதங்கள் காட்டும் மனித நேயம்) என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களையும் ,மாவட்ட அளவில் 40 பள்ளிகள் கலந்து கொண்ட 8ம் வகுப்பு பிரிவில் 3ம் இடத்தை பிடித்த மாணவி சொர்ணாம்பிகாவுக்கு பாராட்டு விழாவும் பள்ளி
அளவில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் பெரும்பாலும் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.நடுநிலைப் பள்ளி அளவில் உள்ள இப்பள்ளி மாணவ ,மாணவியரும் போட்டிகளில் மேல்நிலை பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்டது பாராட்டுக்குறியது. போட்டிக்கு மாணவர்களை ஆசிரியை முத்துமீனாள் அழைத்து சென்றார்.
அளவில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் பெரும்பாலும் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.நடுநிலைப் பள்ளி அளவில் உள்ள இப்பள்ளி மாணவ ,மாணவியரும் போட்டிகளில் மேல்நிலை பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்டது பாராட்டுக்குறியது. போட்டிக்கு மாணவர்களை ஆசிரியை முத்துமீனாள் அழைத்து சென்றார்.
No comments:
Post a Comment