Wednesday 26 November 2014

01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் ,மாநில செயலாளர் திரு..இரமேஷ் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி மற்றும்
தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.

முக்கிய கோரிக்கைகள் மற்றும் விவாவதங்கள்.

✅CPS GPF - ஆக மாற்றும் கருத்துருக்களை அரசுக்கு அனுப்ப போவதாக இயக்குனர் உறுதிமொழி.

✅01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.

அலகு விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும் நடைப்பெற வேண்டுமெனக் கோரிக்கை.
அலகு விட்டு அலகு மாறுதலில் நேரடி நியமன பட்டதாரிகளுக்கு மட்டும் வாய்ப்பளிக்க கோரிக்கை

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு விகிதசாரம் பெற குழு அமைக்க கோரிக்கை

✅MPhil-க்கான பின்அனுமதி மற்றும் பின்னேற்பு வழங்க கோரிக்கை

பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவம் உரிய விளக்கம் மாவட்ட அலுவலர்களுக்கு வழங்க கோரிக்கை

ஓய்வு பெற்ற அல்லது இறந்த ஆசிரியர்களுடைய CPS - கணக்கிலுள்ள நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொடக்கக்கல்வி துறையில் பணிபுரிந்து அலகு விட்டு அலகு மாறுதல் மூலமோ அல்லது பள்ளிக்கல்வி துறைக்கு ஈர்க்க பட்டோரின் CPS கணக்கை சரிசெய்ய கோரிக்கை


அலுவலக பணிக்காக ஆசிரியர்களை மாற்று பணியில் அமர்த்த கூடாது எனக் கோரிக்கை

No comments:

Post a Comment