Wednesday 28 May 2014

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,வுக்கு ஜூன் 2ம் தேதி விண்ணப்


சென்னை: தமிழகத்தில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை, ஜூன் 2ம் தேதி துவக்கப்படுகிறது. தொழில் நுட்பக் கல்வி மற்றும் கல்லூரி இயக்கத்தின் கீழ் இயங்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை கல்லூரிகள், அண்ணா பல்கலை உள்ளிட்ட பல்கலைகள், தனியார் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில், 2014 - 15ம் கல்வியாண்டிற்கு, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., பட்டப்படிப்பு சேர்க்கைக்கான, விண்ணப்பங்கள், ஜூன் 2ம் தேதி முதல் 30ம் தேதி வரை, குறிப்பிட்ட கல்லூரிகளில், காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை விற்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இப்பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு, ஜூலை மூன்றாவது வாரம், கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும். இதற்கான அறிவிப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு, தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பம்

No comments:

Post a Comment