Wednesday 19 February 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவியர் மத்திய இணை அமைச்சர் இ .எம்.சுதர்சன நாச்சியப்பனிடம் இருந்து பரிசு பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேவகோட்டையில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் 50-வது கருத்தொளி இயக்க கண்காட்சி நடைபெற்றது.இதனையொட்டி மாணவர்களக்கு ஓவியம்,பேச்சு,பாட்டு ஆகிய போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டியில் முதல் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள பிரிவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி க.சொர்ணாம்பிகா ஓவிய போட்டியில் முதல் பரிசும்,பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்று வெற்றி பெற்றார்.ஏழாம் வகுப்பு மாணவி எம்.துர்கா பாட்டு போட்டியில் முன்றாம் பரிசு பெற்று வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற இரு மாணவிகளுக்கும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் இ .எம்.சுதர்சன நாச்சியப்பன் பரிசுகளை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவிகளையும்,பயற்சி அளித்த ஆசிரியை முத்துமீனா ,போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியை வாசுகி ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டினார்கள்.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி சி .சொர்ணாம்பிகா மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் இ .எம்.சுதர்சன நாச்சியப்பன் அவர்களிடமிருந்து பரிசு பெற்றபோது எடுத்த படம்.Displaying 19.2.14.cmvschool.pngDisplaying Devakottai 50th Bharat Nirmaan.jpg

No comments:

Post a Comment