Thursday 28 November 2013

சாதனை மாணவர்களுக்கு 

ரொக்கப்பரிசு அறிவிப்பு.

சென்னை: தினமலர் நாளிதழ் சார்பில் சென்னை மாநகராட்சி பள்ளி, பிளஸ் 2 மாணவர்களுக்கான, "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சி, சென்னை பல்கலை நுாற்றாண்டு அரங்கில் நடந்தது. இதில் பங்கேற்று, மாணவர்கள் மத்தியில் பேசிய தினமலர் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி, &'&'மாநகராட்சி பள்ளியில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பதக்கத்துடன், பணப்பரிசும் வழங்கப்படும்" என அறிவித்தார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநகராட்சி பள்ளி மாணவர்களில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுகிறது. இதுதவிர, "சிறு பணப்பரிசு வழங்கலாம்" என முடிவு செய்து இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளோம்.
இதன்படி, முதலிடம் பெறுவோருக்கு, 5,000; இரண்டாம் இடம் பெறுபவருக்கு, 3,000; மூன்றாம் இடம் பெறுவோருக்கு, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். இதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு, அவர் பேசினார்

No comments:

Post a Comment